Special Homams


எண்ணிய காரியத்தில் தங்குதடையின்றி வெற்றியடைய மிகவும் உறுதுணையாய் விளங்குபவன ஹோமங்கள் ஆகும்.ஹோமத் தீயில் நாம் இடும் மூலிகைப் பொருட்கள் அந்தந்த தெய்வங்களுக்கு  உணவாகின்றன. ஹோமத்தீயில் இடும்மூலிகைக்கு சக்திகள் உள்ளன. எடுத்துக்காட்டாக புல்லுருவி சர்வ வசியத்தையும், தேள் கொடுக்கு இராஜ வசியத்தையும்,செந்நாயுருவி ஆண் வசியத்தையும், நில ஊமத்தைப பெண் வசியத்தையும், வெள்ளெருக்கு சத்ரு வசியத்தையும், சீந்தில்தேவ வசியத்திற்கும் இன்னும் பலப்பல மூலிகைகள் பல காரியங்களுக்கும் பயன்படுகின்றன.ஹோமத்தின் போது புனிதநீரால் கும்பத்தை நிரப்பி, அலங்கரித்து வேண்டிய தெய்வங்களை அதில் வரவழைத்து, குத்து விளக்கில் அஷ்டலட்சுமிகளை வரவழைத்து, ஹோமத்தீயில் தெய்வங்களை வசியம் செய்து பால், பழம், தேன், மூலிகை சமித்துகளைஹோமத்தில் தெய்வத்திற்கு உணவாக கொடுத்து, உரிய மந்திரமோதி நம் குறைகளையும் தேவைகளையும் தெய்வத்திடம்கூறும் போது தெய்வங்கள் அவற்றை ஏற்று நமக்கு மகிழ்வுடன் பலனைத்  தருகின்றன.

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative